Header Ads

26 மைக்ரோ கதைகள்- நீதி கதைகள்





26 மைக்ரோ கதைகள்:


1. அப்பாவின் மரணத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்தவனிடம் சாக்லேட் கேட்டது குழந்தை.

-ஜெயா சிங்காரம்


2. ஐந்து வயது மகள் விளையாட செல்போன் கொடுத்துவிட்டு வளர்ப்பு நாயை வெளியில் அழைத்துச் சென்றான்.

- பிரபு பாலசுப்பிரமணியன்


3. எதிர்வீட்டு ரமேஷைத் தெரியாதென்றான் முகநூலில் 5000 நண்பர்களை வைத்திருக்கும் நடராஜ்.

-தனுஜா ஜெயராமன்


4. "உன்னைவிட ஒரு அழகியைப் பார்த்ததில்லை'' என்றான் ஆதாம் ஏவாளிடம்.

-சி.பி.செந்தில்குமார்


5. என் சமையலைக் குறைகூறிக்கொண்டே வளரும் உன் தொப்பை!

-கல்யாணி சேகர்


6. பட்டினியால் இறந்த விவசாயி வாயில் போட்டார்கள் விதை நெல்லை!

-கவிதா ஹரிஹரன்


7. ஒரு மெளனத்தின் அலறல்!

சைலண்ட் மோடில் செல்போன்!

-மன்னன் உசைன்


8. சம உரிமை கேட்ட மனைவியிடம் மாதச் செலவுக் கணக்கைக் காட்டி "சமமா பிரிச்சுக்கலாம்'' என்றான்.

-ஆர்.திலகவதி ரவி


9. பேய் வீடென்று குறிப்பிட்ட வீடுகளில் எப்போதும் வாழ்கிறது ஊராரின் பயம்.

-அ.வேளாங்கண்ணி


10."டேய்! நீ இன்னொரு பையனை கட்டியிருந்தாலும் மனசு ஆறும்'' திட்டினார் பெண் ரோபோவுடன் வீட்டுக்கு வந்த மகனை!

-ஸ்ரீவித்யா KM


11. அவன் அதிர்ஷ்டக்காரன்! மனைவி கிடைத்தாள் மார்பில் பச்சைக் குத்திய காதலியின் பெயரிலேயே!

-தயா.ஜி.வெள்ளைரோஜா


12. ''பிள்ளை பெத்துக்கத் துப்பில்ல'' வீட்டில் திட்டு வங்கியவள் பால் கொடுத்தாள் யாரோ பெற்ற பிள்ளைக்கு. "கட்'' என்றார் இயக்குனர்.

-விஜி.முருகநாதன்


13. யானையின் வழித் தடத்தில் அமைந்த இருப்புப் பாதையில் விரைவு ரயில் வருகிறது. யானை மெதுவாகக் கட..க்..கி..ற..!

-பழனீஸ்வரி தினகரன்


14. நாடுகளிக்கிடையில் பேச்சு வார்த்தை!

மேஜைகளுக்கடியில் துப்பாக்கிகள்!

-முரளி, மதுரை


15. "பேய்களில் நம்பிக்கையில்லை'' என்றான் சுடுகாட்டில். கல்லறைக்குள்ளிருந்து சிரிப்புச் சத்தம்!

-ரெஜி தரகன்


16. நடிக்க வந்த குழந்தைக்கு கேரவனில் நடிகை பால் கொடுத்தாள். குழந்தை சிரித்தது. மார்பில் வலி குறைந்தது.

-செல்லம் ஜெரினா


17. 'ஒரு ஊரில்' என்று ஆரம்பித்தார் தாத்தா.

'சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க' என்கிறான் பேரன்.

-இயக்குனர் ஹரி கணேஷ்


18. "விட்டுடு தம்பி!'' என்று கதறிய பெண்ணை விட்டுவிட்டு நகர்ந்தான் அனாதை கொள்ளையன்.

-குமரன் கருப்பையா


19. "Good morning. We are calling from tamil sangam!''

- அப்துல் ரஷீது


20. ஊருக்கே உணவு கொடுத்தான் கொள்ளைப் பசியுடன் ஸ்விக்கி டெலிவரி பையன்.

-ஜே.குமார் ராம்


21. வாசலில் பசியென்ற பிச்சைக்காரனை விரட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றார் அன்னதானம் செய்ய!

-லக்‌ஷ்மன் மோகனசந்திரன்


22.ஆம்புலன்சுக்கு போன் செய்யச்சொல்லி அழுதது குழந்தை- மாடியிலிருந்து தவறவிட்ட பொம்மைக்காக!

-எஸ்.எஸ்.பூங்கதிர்


23. மாமியாருக்குப் பிடித்த எல்லாவற்றையும் சமைத்தாள் மருமகள் - திதிக்காக!

-ஸ்ரீதேவி மோகன்


24. இன்றுடன் உலகம் அழிகிறது!

முழு விபரம் நாளைய நாளேட்டில்!

-ராம் சின்னப்பயல்


25. ஸாஃப்ட்வேர் என்ஜினியர் வேலைக்கான சிபாரிசுக் கடிதத்தில் அரசியல்வாதி வைத்தார் கைநாட்டு!

-கருணாகரன்


26. டிவி சினிமாவில் கொடூர கற்பழிப்பு காட்சி ரிமோட்டால் வில்லனை கொன்றேன்...

- சுகவனம்

No comments

Powered by Blogger.