Header Ads

உங்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறந்துள்ளதா? இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!

 

  


 ஆண்  குழந்தை வளர்ப்பில் ஏற்படும் சில முக்கிய  சந்தேகங்களுக்கான பதிவு இது....

1.ஆண் குழந்தையின் மார்பகம் (Chest) பெரிதாகவும்   (mastitis) , தாய்ப்பால் சிறிதளவு மார்பில் இருந்து வருகிறதா?

பயப்பட வேண்டாம்.இது முற்றிலும் தாயின் ஹார்மோன் ஆண் குழந்தையின் இரத்தத்தில் பிரசவத்தின்போது கலப்பதால் ஏற்படக்கூடிய ஒன்று...இது குழந்தை பிறந்து ஒரு வாரத்தில் தாயின் ஹார்மோன் அளவு  குழந்தையின் இரத்தத்தில் குறைய துவங்குவதால்  குழ்ந்தையின் மார்பின் வீக்கம் குறைய துவங்கி இயல்பு நிலைக்கு திரும்பி விடும்...பால் சுரப்பதும் நின்று விடும்.



மாறாக மார்பை அமுக்கி பாலை வெளியேற்றி மார்பின் அளவை குறைக்க முயற்சி செய்தால் அது முடிவில் குழந்தைக்கு வலியையும் வேறு சில தொந்தரவுகளையும் கொடுக்கும்..

இயற்கை தன் வேலையை செய்ய அனுமதியுங்கள்..

2.பிறந்த  ஆண் குழந்தையின் விதைப்பையின் விதை கீழிறங்கவில்லை? இது பெரிய பிரச்சினையா? - Un descendent testis

பொதுவாக விதையானது(testis) தாயின் கருவில் இருக்கும்போது வயிற்று பகுதியில் தான் இருக்கும்..பிரசவத்தின்போது ஒரு சில குழந்தைகளுக்கு இது வயிற்று பகுதியில் இருந்து கீழிறங்காமல் இருந்துவிடும்..இதனால் அக்குழந்தைகளின் விதைப்பை காலியாக இருக்கும்..காலியாக இருக்கும் விதைப்பையால் விந்துக்களை உருவாக்க முடியாது..ஆனால் பயம்வேண்டாம்.இது ஒரு சில வாரங்களிலோ இல்லை மாதங்களிலோ இறங்கிவிடும்..




ஒருவேளை குழந்தைக்கு இரண்டு வயதாகியும் அது இறங்கவில்லை என்றால் அறுவை சிகிச்சையோ அல்லது ஹெச்.சி.ஜி (hcg)என்ற ஹார்மோன் சிகிச்சையோ தேவைப்படும்..

3.குழந்தையின் பிறப்பு உறுப்பு சிறிதாக உள்ளதே? எதிர்காலத்தில் மலட்டு தன்மை  உருவாக்குமோ? - Micropenis

குழந்தையின் பிறப்பு உறுப்பின் அளவு இழுத்து பிடிக்கப்பட்ட நிலையில் 3.5செமீ க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அதற்கு பெயர் சிறிய பிறப்புறுப்பு(micro penis)..இது ஒரு ஹார்மோன் குறைவால் வருகிறது..மலட்டு தன்மை உருவாக வாய்ப்பு உள்ளது..சில நேரத்தில் குழந்தை வளர வளர ஹார்மோன் சரியாக சுரந்து மலட்டு தன்மை ஏற்படாமல் போகவும் வாய்ப்பு உள்ளது..சிறப்பு சிகிச்சை என்று எதுவும் இல்லை..



4.என் குழந்தையின் பிறப்புறுப்பின் துவாரம் பின்புறமாக அமைந்துள்ளது..இதனால் என்ன பிரச்சனை வரக்கூடும்?- Hypospadiasis

இது ஒரு சிறிய பிரச்சினை தான்..ஆனால் இது சரி செய்யகூடிய ஒன்று தான்..இப்படிப்பட்ட குழந்தைகளிடம் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க ஊக்குவிக்க வேண்டும்.. குழந்தையின் ஒரு வயது அல்லது இரண்டு வயதிற்குள் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து விடலாம்..அப்படி இரண்டு வயதிற்குள் சரிசெய்யாத பட்சத்தில் எதிர்காலத்தில் இது சில பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

T


5.குழந்தையின் பிறப்புறுப்பின் துவாரம் ஏன் பக்கவாட்டில் அமைந்துள்ளது? - Epispadiasis 

இது அரிதாக காணப்படும் பிரச்சினை..இப்படி இருக்கும் குழந்தைகளின் சிறுநீரகத்தில் நிச்சயம் வேறு சில பிரச்சனைகளும் சேர்ந்து காணப்படும்..


பெற்றோர் செய்ய வேண்டியவை

குழந்தைகளின் பிறப்புறுப்பை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.

சிறுநீர் கழிக்கும்போது குழ்ந்தை அழுதால் கவனிக்க வேண்டும்..

குழந்தையின் நுனித்தோலை பின்நோக்கி இழுக்கமுடியாவிட்டால் அதை இழுக்க முயற்சிக்க வேண்டாம்..அப்படி செய்தால் குழந்தைக்கு அது வலியை உண்டாக்கும்..சில நேரங்களில் அது கிழிந்து இரத்தம் கூட ஏற்படும்..

குழந்தை வளர வளர நுனித்தோல் தனியாக பிரிக்ககூடிய விதத்தில் வந்துவிடும்...

முறையாக குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தினால் ஆரோக்கியமான வாழ்வை அவர்களுக்கு கொடுக்கலாம்...நம் குழந்தைகளுக்கு நாமே முதல் மருத்துவர்கள்.

No comments

Powered by Blogger.