Header Ads

அப்துல் கலாம் பற்றிய முக்கிய குறிப்புகள்


👉ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் 1931-ல் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மீனவர் குடும்பத்தில் பிறந்தார். 


👉பள்ளி பருவத்தில் காலையில் செய்தித்தாள் விநியோகம் செய்தார். 


👉திருச்சி தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.


👉பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். 


👉இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய விஞ்ஞானி இவர். 


👉ஐக்கிய நாடுகள் சபை அப்துல் கலாமின் பிறந்தநாளை உலக மாணவர் தினமாக 2010-ல்அறிவித்தது.


👉1981-ல் பத்ம பூஷண் விருது, 1990-ல் பத்ம விபூஷன் விருது, இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற ஜனாதிபதி என்ற பெருமை பெற்றவர். 


👉’ஏவுகணை மனிதன்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் அப்துல் கலாம். 


👉அவருக்கு மிகவும் பிடித்தமான மாணவர்களுக்கு சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்கும்போதே 2015 ஜூலை 27-ம் தேதி இயற்கை எய்தினார்...

No comments

Powered by Blogger.